நியூயார்க்: பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாதிகளை கறுப்புப் பட்டியலில் சேர்க்க இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் பலமுறை ஐ.நா சபையில் தீர்மானங்கள் கொண்டு வந்தன. ஆனால் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட சீனா, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி மேற்கண்ட தீர்மானம் நிறைவேறாமல் தடுத்து நிறுத்தியது. இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் உயர்மட்ட அமர்வில் இந்தியா சார்பில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், ‘கடன், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காண ஜி20 நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்படும். எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டு வருகிறது.