சென்னை: தமிழகசுற்றுச்சூழல் முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு கூறியதாவது: பசுமை தமிழகம் என்பது மிகப்பெரிய திட்டம் என்பதால் அரசாங்கத்தால் மட்டும் செயல்படுத்த முடியாது. இந்த நிகழ்வில் ஆட்டோ ஓட்டுநர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்கள், அரசு பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றால் பசுமை தமிழகம் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியும்.