வடபழனியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாயின் 2-வது கணவர் கைது

சென்னை: சென்னை கே.கே நகர் பகுதியை சேர்ந்த 50 வயது பெண், கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது 13 வயது மகள் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் ஷேர் ஆட்டோ டிரைவரான முருகன் (வயது 53) என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் கணவன் மனைவி போல சேர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் மதுபோதையில் வீட்டிற்கு வரும் முருகன் தனிமையில் இருந்த சிறுமிக்கு அடிக்கடி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி முருகனின் அத்துமீறல் குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முருகனிடம் அவர் தகராறில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது தாய், மகள் இருவருக்கும் முருகன் கொள்ளை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து மகளுக்கு தனது 2-வது கணவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குழந்தைகள் பாதுகாப்பு நல உதவி மையத்தை தொடர்பு கொண்டு அந்த பெண் புகார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முருகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் இடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து முருகனை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ மற்றும் கொள்ளை மிரட்டல் என சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: