கடலூர்: சிதம்பரத்தில் 14 வயது சிறுமியை திருமணம் செய்த நடராஜர் கோவில் தீட்சிதரையும், திருமணம் செய்துவைத்த தீட்சிதரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிதம்பரம் வடக்கு வீதியை சேர்ந்த நடராஜர் கோவில் தீட்சிதரான சோமசேகர், தனது 14 வயது மகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர், சித்ரா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடராஜர் கோவில் தீட்சிதருடன் சிறுமிக்கு திருமணமானது உறுதியானது.