அண்டார்டிகாவில் ஓணம் கோலாகலம்

அண்டார்டிகா: தொழிலதிபர் ஆனந்த் மகிந்தரா டிவிட்டரில் அண்டார்டிகாவில் ஓணம் கொண்டாடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில், உறைந்த ஏரியில் உள்ள பனியின் மீது, இளைஞர்கள் குழு அழகிய மலர் வடிவத்தை செதுக்கி உள்ளனர். அதில், ‘ஓணம் அண்டார்டிகா’ என்று எழுதப்பட்டுள்ளது. இளைஞர்கள் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். ‘இந்தியர்கள் ஓணம் கொண்டாடுவதை உங்களால் தடுக்க முடியாது. அண்டார்டிகாவில் கூட சிறப்பாக ஓணம் கொண்டாடுவார்கள்,’ என ஆனந்த் மகிந்தரா தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை 67 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

Related Stories: