வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 14 வயதுடைய 9ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள், நேற்று காலை பள்ளிக்கு வந்தனர். இருவரும் மதியம் 12 மணியளவில் சோர்வாக இருந்தனர். சந்தேகமடைந்த ஆசிரியர் விசாரித்த போது, குடும்ப பிரச்னையால் சாணி பவுடர் (மயில்துத்தம்) சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர். உடனடியாக இருவரையும் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த வாழப்பாடி டிஎஸ்பி சுவேதா மற்றும் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர்.