லண்டன்: மறைந்த இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் உடலுக்கு 2.50 லட்சம் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மறைந்த இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் உடல், 10 நாள் அஞ்சலிக்குப் பின் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் அரச மரியாதையுடன் கணவர் இளவரசர் பிலிப் உடல் அருகே நேற்று முன்தினம் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடல் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்பட்டு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்தது. புதன் கிழமை இரவு முதல் திங்களன்று காலை 6.30 மணி வரை ராணி 2ம் எலிசபெத் உடலுக்கு 24 மணி நேரமும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.