நாங்கள் இந்து மதத்தில் கூறப்படும் சனாதனத்திற்கு எதிரானவர்கள்: திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பேச்சு

சென்னை: தாங்கள் இந்து மதத்தின் பெயரால் கூறப்படும் சந்தானத்திற்கு எதிரானவர்கள் என்று திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கூறியுள்ளார். சென்னை தியாகராய அரங்கத்தில் திமுக இலக்கிய அணி சார்பில் நடந்த முப்பெரும் விழா மற்றும் மு.க.ஸ்டாலினின் தீரமிகு மடல்கள் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ஆ.ராசா இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவில் சனாதனத்தை பின்பற்றுபவர்கள் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றுபவர்கள் என இந்துக்கள் இரண்டு வகையினராக உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்டு ஆளுநராக பதவியேற்ற ஆர்.என்.ரவி, ஏன் சனாதனத்தை பற்றி பேசுகிறார்? என்று ஆ.ராசா கேள்வி எழுப்பினார். சனாதன தர்மம் என்பது வேதத்தின் அடிப்படையிலும், புத்தகங்களின் அடிப்படையிலும் கொண்டுவரப்பட்டது என்றும் ஆ.ராசா குறிப்பிட்டார்.

Related Stories: