காஞ்சிபுரம்: விஆர்பி சத்திரம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக நிலம் எடுக்கப்பட்டதால் மாற்று இடம் வழங்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள், மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட 11வது வார்டு விஆர்பி சத்திரம் கிராமத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில், சுமார் 60க்கும் மேற்பட்ட வீடுகள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் பாதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகளுக்கு வேறு எந்த நிலங்களும் இல்லாத காரணத்தால் தற்போது இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் உள்ளது.