புதுடெல்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் நேற்று பாஜவில் இணைந்தார். பஞ்சாப் முன்னாள் முதல்வராக இருந்தவர் அமரீந்தர் சிங். உட்கட்சி மோதலால் காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கினார். சமீபத்தில் நடந்த பஞ்சாப் சட்டமன்ற பேரவை தேர்தலில் பாஜவுடன் கூட்டணி அமைத்து பஞ்சாப் லோக் காங்கிரஸ் போட்டியிட்டது. இதில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் கட்சி தோல்வியுற்றது. பாட்டியலா தொகுதியில் போட்டியிட்ட அமரீந்தரும் படுதோல்வி அடைந்தார்.