இம்பால்: மணிப்பூரில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டை மக்கள் கண்டறிந்ததால், அவற்றை அதிகாரிகள் குழு அழித்தது. இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் ஜப்பானியப் படைகள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியா மீது படையெடுத்தன. அவர்கள் மணிப்பூர் மற்றும் நாகாலாந்து பகுதியை தங்களது போர் தளங்களாக பயன்படுத்தினர். வெடிகுண்டுகளை ஆங்காங்கே பதுக்கி வைத்திருந்தனர். இந்நிலையில் கிழக்கு மணிப்பூரில் வசிக்கும் மக்கள் குறிப்பிட்ட இடத்தை தோண்டும்போது அங்கு பழங்கால வெடிகுண்டு மட்கிய நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த பாதுகாப்புப் படை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் குறிப்பிட்ட பகுதியை சுற்றிவளைத்தனர்.