சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் நாளை மறுநாள்(19ம்தேதி) பாஜவில் இணைகிறார். பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங், காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட மோதலால், கடந்த ஆண்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரசில் இருந்து விலகிய அவர், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், பாஜவுடன் இணைந்து அமரீந்தர் சிங் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.