நாளை மறுநாள் பாஜவில் ஐக்கியம் அமரீந்தர் முடிவு

சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் நாளை மறுநாள்(19ம்தேதி) பாஜவில் இணைகிறார். பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங், காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட மோதலால், கடந்த ஆண்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரசில் இருந்து விலகிய அவர், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், பாஜவுடன் இணைந்து அமரீந்தர் சிங் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.

இந்நிலையில், அமரீந்தர் சிங், பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரித்பால் சிங்  கூறுகையில், ‘‘அமரீந்தர் வரும்  19ம் தேதி பாஜவில் இணைகிறார். 7 முன்னாள் எம்எல்ஏக்கள், ஒரு முன்னாள் எம்பி உள்ளிட்ேடாரும் பாஜவில் இணைக்கின்றனர்.பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியானது பாஜவுடன் இணைக்கப்படும்,’’ என்றார்.

Related Stories: