18ம் ஆண்டு தொடக்க நாள் வரும் தேர்தல்களில் தேமுதிக எழுச்சி பெறும்: விஜயகாந்த் அறிக்கை

சென்னை: , தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பல்வேறு சவால்களை தாண்டி நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட கட்சி தேமுதிக. கட்சி தொடங்கி 17 ஆண்டுகள் முடிவடைந்து இன்று 18ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தேமுதிகவுக்கு என்றுமே ஒரு தனி வரலாறு உண்டு. சாதி, மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட கட்சியாக தமிழகத்தில் தொடங்கப்பட்டது. தமிழக மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கமாகும்.

தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர அது வீழ்ச்சி அல்ல. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக பலத்தை நாம் அனைவரும் நிச்சயமாக நிரூபிப்போம். அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களில் தேமுதிக மீண்டும் எழுச்சி பெறும். எதற்கும் அஞ்சாமல் இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம். தேமுதிக 18ம் ஆண்டு தொடக்க நாளையொட்டி கட்சியினர்  கொண்ண்டாட வேண்டும்.

Related Stories: