சென்னை: , தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பல்வேறு சவால்களை தாண்டி நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட கட்சி தேமுதிக. கட்சி தொடங்கி 17 ஆண்டுகள் முடிவடைந்து இன்று 18ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தேமுதிகவுக்கு என்றுமே ஒரு தனி வரலாறு உண்டு. சாதி, மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட கட்சியாக தமிழகத்தில் தொடங்கப்பட்டது. தமிழக மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கமாகும்.