அண்ணாநகர்: சென்னை பாடியை சேர்ந்தவர் முகமது மன்சூர்(45). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இவர் நேற்று மாலை குடும்பத்துடன் திருமங்கலத்தில் ஒரு பிரபல வணிக வளாகத்தில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு சினிமா பார்ப்பதற்காக டிக்கெட் எடுக்க வரிசையில் காத்திருந்தார். அப்போது இவரது செல்போனை ஒருவர் திருடிச் சென்றதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.