ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் சிதிலமடைந்து காணப்பட்டது இதை கிராமமக்கள் மற்றும் பக்தர்களும் சீரமைத்து புதுப்பித்தனர். இந்நிலையில் இதன் கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் 10 தேதி காலை 8 மணிக்கு வாஸ்து சாந்தி, கலச ஸ்தாபனம், பின்னர் புதிய விக்கிரகங்கள் கரிகோலமும் , மாலை 5 மணிக்கு பகவத் பிரார்த்தனை, வேதபரபந்தம் தொடக்கம், இரவு மூலவர் பிம்ப ஸ்தாபனம், பூர்ணாகதி ஆகியவையும் , இரண்டாவது நாள் 11 தேதி காலையில் யாகசாலை பூஜைகள், ஹோமம், மகா சாந்தி, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் கோபூஜையும், இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் ரக்க்ஷா பந்தனம், பூர்ணஹுதியும் நடைபெற்றது.