திருக்கழுக்குன்றம்: புதுப்பட்டினத்தில் உள்ள பஸ் நிலையத்தில் போதிய இட வசதி இல்லாததால், சாலையிலேயே பஸ்கள் நிறுத்தப்படுகிறது. புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம் பகுதியில் இருந்து வாயலூர், ஆயப்பாக்கம், நல்லாத்தூர், நெரும்பூர் வழியாகவும், விட்டிலாபுரம், லட்டூர் வழியாக திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டுக்கு ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் புதுப்பட்டினம் பகுதியில் நின்று செல்வதற்காக பஜார் பகுதியில் சிறிய பஸ் நிலையம் உள்ளது.