மதுரை: கல்வி அனைவருக்கும் கட்டாயம் இலவசமாக வழங்கப்பட வேண்டுமென நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தேனியைச் சேர்ந்த ஜெயபால், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அரசு உதவி பெறும் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலித்தனர். கல்லூரி கல்வி இணை இயக்குனர் விசாரணையில், கூடுதல் கட்டணம் வசூலித்ததாக கூறப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன. 2022-23ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு முதலில் விண்ணப்பம் செய்யுமாறும், பிறகு கட்டணம் செலுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை பெற்று மாணவர் சேர்க்கை நடத்துமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.