ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 50க்கும் மேற்பட்ட கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 35 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதால் பேரூராட்சி சார்பில் பலமுறை எச்சரிக்கை விடப்பட்டு வந்தது. இந்நிலையில், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் எனவும், அவ்வாறு பயன் படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.