சூரத்:‘உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவானது சாதாரண சாதனை இல்லை,’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், சூரத் நகரில் மிகப்பெரிய மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை டெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி காணொலி மூலமாக தொடங்கி வைத்தார். இதில் பேசிய அவர், ‘சமீபத்தில், இந்தியா உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியது. அம்ரித் மகோத்சவ் காலத்தில் இன்னும் கடினமாக உழைத்து மிகப்பெரிய இலக்குகளை அடைவதற்கு இந்த சாதனை, நம்பிக்கை அளித்துள்ளது. இந்த முன்னேற்றம் சாதாரணமானது அல்ல.