திருவனந்தபுரம்: கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோழிக்கோடு அருகே மலையின் ஒரு பகுதி சரிந்து விழும் பரபரப்பு காட்சி வெளியாகியுள்ளது. பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டையம், கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மரிப்புழா மலைப்பகுதியில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டியது.