புழல்: புழல் பகுதியில் தனியார் குடோனில் பதுக்கிய 55 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அரிசி கடத்திய கடத்தல்காரர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
புழல் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டிஜிபி ஆபாஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் டிஜிபி ஆபாஷ்குமார் உத்தரவின்பேரில், எஸ்பி கீதா, டிஎஸ்பி நாகராஜன் வழிகாட்டுதலில் ஆய்வாளர் சுந்தராம்பாள் தலைமையிலான குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.