கோத்தகிரி : கோத்தகிரி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து காட்டு யானைகள் மிரட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோத்தகிரி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சமீப காலமாக காட்டு யானை கூட்டம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் நான்காவது கொண்டை ஊசி வளைவுவில் பகல் நேரத்தில் குட்டியுடன் இரண்டு யானைகள் சாலையில் உலா வந்து வாகனங்களை மறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.