பெங்களூரு: இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) எத்தரப்புக்கும் வெற்றி, தொல்வியின்றி டிராவில் முடிந்தது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த 1ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த நியூசிலாந்து ஏ அணி முதல் இன்னிங்சில் 400 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அபாரமாக விளையாடிய ஜோ கார்ட்டர் 197 ரன் விளாசினார். இந்தியா ஏ பந்துவீச்சில் முகேஷ் குமார் 5 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய இந்தியா ஏ அணி 3ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 492 ரன் எடுத்திருந்தது. தொடக்க வீரர் அபிமன்யு ஈஸ்வரன் 132 ரன் விளாசி ரிப்பன் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். ரஜத் பத்திதார் 170 ரன், திலக் வர்மா 82 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர்.