சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் கலியமூர்த்தி (40). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் இவரை, அவரது மனைவி சங்கராபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். திடீரென மனைவியின் கையை உதறித் தள்ளிவிட்டு திருவண்ணாமலை பகுதியில் இருந்து சங்கராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தின் முன் பாய்ந்து படுத்துக்கொண்டார். அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி விட்டார்.