ஊட்டி: குன்னூர் அருகே உணவு தேடி சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேரட்டி கிராமம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பேரட்டி கிராமத்தை சுற்றிலும் வனப்பகுதி, தேயிலை தோட்டம் உள்ளது. இப்பகுதியில் அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சிலர் கூறிவந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமன் என்பவர் வீட்டில் இரண்டு நாய்களை சிறுத்தை வேட்டையாடி சென்றது. இந்நிலையில், மீண்டும் நேற்று முன்தினம் இரவு இரண்டு சிறுத்தைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வந்தன. சிறிது நேரம் அந்த வீட்டைச் சுற்றிலும் இரு சிறுத்தைகளும் வலம் வந்தன.