இலங்கை: இலங்கையில் இருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் நாடு திரும்பினார். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் கடந்த ஜூலை மாதம் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர்.