திருக்கழுக்குன்றம்: புதுப்பட்டினத்தில் இயங்கி வரும் அரசினர் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, படிக்கும் மாணவ-மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் ஸ்ரீ வித்யா தலைமை தாங்கினார். பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழக பொருளாளர் தாஜுதீன், வாயலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிங் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.