திருத்தணி: திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் ஆற்காடு குப்பத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் நேற்று மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்த கூடாது பயன்படுத்தும் சக மாணவர்களை ஆசிரியர்களிடம் கூறி அவர்களை ஒழுக்க நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினர்.