சென்னை: சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்ட ஜிவி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.8.94 கோடி மதிப்பிலான திரையங்கத்தை அமலாக்கத் துறையினர் நேற்று முடக்கினர். சென்னை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஜிவி பிலிம்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தமிழ் படங்களை விநியோகம் செய்து வருகின்றனர். இந்நிறுவனம் சர்வதேச வைப்பு ரசீது மூலம் கிடைத்த வருவாய் முலம், போர்ச்சுகலில் உள்ள பேங்கோ எபிஷா என்ற வங்கியில் கணக்கு தொடங்கி பல்வேறு சட்டவிரோத பண பரிவத்தனையில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள ஜிவி பிலிம்ஸ் நிறுவனத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
