கவுகாத்தி: தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்ததாக அசாமில் செயல்பட்டு வந்த மதரசா பள்ளி இடிக்கப்பட்டது. அல்-கொய்தா, அன்சாருல் பங்களா தீம் என்ற ஆகிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக, அசாம் மாநிலம், போங்கைகான் மாவட்டத்தில் உள்ள மதரசா பள்ளியின் ஆசிரியர் ஒருவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அன்சாருல் பங்களா அணியின் 2 வங்கதேச தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்களுக்கு இவர் கடந்த 4 ஆண்டுகளாக அடைக்கலம் கொடுத்தது வந்தது தெரியவந்தது. இதையடுத்து, வங்கதேசத்தை சேர்ந்த தீவிரவாத ஆதரவாளர், மதரசாவின் முதல்வர், மற்றொரு நபரை போலீசார் கைது செய்தனர்.