ஜி.கே.மூப்பனார் 21-வது நினைவு நாள்; கட்சி தலைவர்கள் மரியாதை

சென்னை:  தமாகா நிறுவன தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 21ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து நினைவிடத்துக்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், புதுச்சேரி, தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, கராத்தே தியாகராஜன், கரு நாகராஜன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், ஐஜேகே ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஜி.கே.மூப்பனார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதை தெடார்ந்து, தமாகா மாநில பொது செயலாளர் விடியல் சேகர், சக்தி வடிவேல், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், அசோகன், மாநில ெபாது செயலாளர் ஜவஹர்பாபு, மாநில செயலாளர் பாலசந்தானம், தி.நகர் கோதண்டன், ராஜன் எம்.பி.நாதன், இளைஞர் அணி தலைவர் யுவராஜா, மாவட்ட பொருளாளர் கிண்டி மம்மு, வர்த்தகர் அணி தலைவர் ஆர்.எஸ்.முத்து, மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், சி.பிஜூ  கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Related Stories: