புதுடெல்லி: டெல்லியில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமி ஒருவரை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜஸ்மீத் சிங் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இளைஞர் தரப்பில், ‘‘சிறுமியும், இளைஞரும் பரஸ்பர சம்மதத்துடனே உறவு கொண்டுள்ளனர். ஆனால், அந்த சிறுமி 18 வயதுக்கு குறைவானர் என்பதால் பலாத்கார வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிறுமிக்கு அதிகாரப்பூர் ஆவணங்களின்படி 3 வெவ்வேறு பிறந்த தேதிகள் உள்ளன. போக்சோ உள்ளிட்ட சட்டங்களை பயன்படுத்தவே பிறந்த தேதியை மாற்றி உள்ளனர்’’ என வாதாடப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி அளித்த தீர்ப்பு: ஒரு ஆணும், பெண்ணும் பரஸ்பர சம்மதத்துடன் உடல் உறவில் ஈடுபடும் போது உறவில் ஈடுபடும்போது ஆதார் அட்டை, பான் கார்டைப் பார்க்கவோ அல்லது அவரது பள்ளிப் பதிவுகளில் இருந்து பிறந்த தேதியைச் சரிபார்க்கவோ தேவையில்லை.