விழுப்புரம்: நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆண் நண்பரை விழுப்புரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பிரபல நடிகையான அமலாபால் கடந்த 2018ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் ஆரோனில் அருகே பெரியமுதலியார் சாவடி என்ற பகுதியில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி, அதில் தங்கியுள்ளார். அவருடன் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த படத்தயாரிப்பாளரான பவ்நிந்தர் சிங் என்ற ஆண் நண்பர் ஒருவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு அமலாபால் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் ஆண் நண்பர் தன்னை ஏமாற்றி பணமோசடி செய்வதாகவும், தன்னை மிரட்டி உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்த ஆண் நண்பரை விழுப்புர மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.