பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது எப்படி என்பது குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ``இந்த இலக்கை விரட்ட முடியும் என்ற நம்பிக்கை முதலிலேயே இருந்தது. அதற்கு தகுந்த பலன் கிடைத்தது. ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி பணிகள் கொடுத்திருந்தேன். அதனை அனைவரும் புரிந்துகொண்டு அசத்தினர். இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் கடந்த ஓராண்டாக செய்த முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது. அமீரக மைதானங்களை புரிந்துக்கொண்டுள்ளனர்’’ என்றார்.