இஸ்லாமாபாத்: ‘பிரம்மோஸ் ஏவுகணை விவகாரத்தில் 3 ராணுவ அதிகாரிகளை இந்தியா பதவி நீக்கம் செய்த நடவடிக்கை போதுமானதாக இல்லை,’ என்று பாகிஸ்தான் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்தியாவின் சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரம்மோஸ், கடந்த மார்ச் மாதம் தவறுதலாக பாகிஸ்தானுக்குள் பாய்ந்து சென்று விழுந்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தவறுதலாக இது நடந்து விட்டதாக இந்தியா விளக்கம் அளித்தது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், விமானப்படை அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த தவறு நடந்ததாக உறுதியானது. இதையடுத்து, 3 அதிகாரிகள் நேற்று முன்தினம் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.