ஆவடி: ஆவடி மாநகராட்சி உட்பட்ட 33வது வார்டு பொன்னியம்மன் கோயில் தெருவில் தண்ணீர் தொட்டி சேதமடைந்ததால் போதிய குடிநீரின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 33வது வார்டு பொன்னியம்மன் கோயில் தெருவில் சுமார் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு 1000 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி இருந்தது. சமீபத்தில் பெய்த மழையால் அந்த தண்ணீர் சேதமடைந்தது.
மேலும் அங்கிருந்த மின் மோட்டார் பழுதானதுடன், மின்சார கம்பிகள் அறுந்தது.