திருவள்ளூர்: சிறுவாபுரி முருகன் கோயிலில் குடமுழுக்கு முடிவடைந்த முதல் செவ்வாய்க்கிழமை என்பதால் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து 19 ஆண்டுகளுக்கு பிறகு பாலசுப்பிரமணிய கோவிலில் குடமுழுக்கு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.