கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் நீலமங்கலம் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு தூய்மை பணி முகாமினை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தொடங்கி பார்வையிட்டு ஆய்வு செய்தார். நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் நோக்கமே பொதுமக்களிடையே பாதுகாப்பான சுகாதாரத்தையும் மற்றும் அவர்களுடைய வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்திடவும், திட மற்றும் திரவக்கழிவினை முறையாக தரம் பிரித்தல், ஒரு முறை பயன்படுத்கக்கூடிய நெகிழிகளை தவிர்த்து அதற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய பைகளை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொதுமக்களிடையே சுகாதார குடிநீர் வழங்குதல், திரவக்கழிவு மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்ப்பதன் மூலம் சுற்றுப்புறத்தினை பசுமையாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான்.