ஆலந்தூர்: சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் போன்ற பகுதிகளில் காற்று மழையினால் சாய்ந்த மரங்கள் மின்கம்பிகளை அறுத்து கொண்டு கீழே விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குறிப்பாக ஆலந்தூர் 165வது வார்டுக்கு உட்பட்ட ஆதம்பாக்கம், டி.என்ஜி ஒ.காலனி, சவுத் செக்டர் போன்ற பகுதிகளில் உள்ள பெரிய பெரிய மரங்கள் மின்கம்பிகள் மீது விழுந்தது. இதனால் கம்பிகள் அறுந்து தொங்கியதில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதேபோல் ஆலந்தூர் குருபக்ஸ் தெரு, சவுரி தெரு போன்ற பகுதிகளில் உள்ள மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.