சென்னை வடபழனியில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது

சென்னை: சென்னை வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை வடபழனி மன்னர்தெருவில், சரவணன் என்பவர் நடத்தி வரும் நிதிநிறுவனத்தில் கடந்த 16ம் தேதி, சினிமா பணியில் கொள்ளை நடத்தப்பட்டது. இதில் தொடர்புடைய கல்லூரி மாணவர் ரியாஸ் பாட்ஷா என்பவர் போலீசில் சிக்கிய நிலையில், கிஷோர் கரண், தமிழ்ச்செல்வன் ஆகிய இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இதையடுத்து தப்பியோடிய கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. அப்போது ராணியப்பேட்டையில் பதுக்கிங்கியிருந்த ஜானி என்கிற சந்தோஷ், தினேஷ் உள்ளிட்ட மேலும் 3 பேரை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் 4 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட இஸ்மாயில் மற்றும் பரத் ஆகியோரிடமிருந்து ரூ.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.    

Related Stories: