தாம்பரம்: தமிழக முழுவதும் ஊரக வளர்ச்சி துறை சார்பில், கிராமப்புறங்களில் தீவிர சுகாதார பணிகளை செய்ய ‘நம்ம ஊரு சூப்பர்’என்ற சிறப்பு பிரசாரம் தொடங்கியது. அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெறும் ‘நம்ம ஊரு சூப்பர் பிரசாரம் மூலம் கிராமப்புறங்களில் சுகாதார பணிகளில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு கட்டிடங்கள், ஊராட்சி பகுதிகளில் தீவிர தூய்மை பணிகள் செய்து, பொதுமக்களிடையே சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.