உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடியில் வருகிற 1ம் தேதி முதல் வாகனங்கள் செல்வதற்கான சுங்க கட்டணத்தை உயர்த்தி திருச்சி டோல்வே பிரைவேட் லிமிட்டெட் அறிவித்துள்ளது. ஏற்கனவே கார், வேன், ஜீப் ஒரு முறை செல்வதற்கான கட்டணம் ரூ.55ஆக இருந்தது. தற்போது ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் பலமுறை சென்று வருவதற்கு கட்டணம் ரூ.85ஆக இருந்தது. இந்த கட்டணம் தற்போது ரூ.15 உயர்த்தி ரூ.100ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்கள் ஒரு முறை செல்வதற்கு ரூ.100ஆக இருந்தது, தற்போது ரூ.115 ஆக உயர்தப்பட்டுள்ளது. பலமுறை சென்று வருவதற்கு ரூ.150ல் இருந்து ரூ.170 ஆக உயர்ந்துள்ளது.