சென்னை: ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி, கோகுலம் காலனி விரிவு, கிருஷ்ணன் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மனோகரன் (55). இவரது வீட்டில் பூனை வளர்த்து வந்தார். பக்கத்து வீட்டில் வசிக்கும் மற்றொரு ஆட்டோ டிரைவர் சங்கர் (37). இவர், நாயை வளர்த்து வந்தார். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சங்கரின் நாய், மனோகரனின் பூனையை கடித்து குதறியதால் பூனை இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், தான் செல்லமாக வளர்த்த பூனை இறந்துவிட்டதே என்று கடந்த 10 நாட்களாக குடித்துவிட்டு சங்கரை தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்துள்ளார்.