பீஜிங்: சீனாவில் மீன்கள், நண்டுகள் என கடல்வாழ் உயிரினங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் வீடியோ வைரலாகி உள்ளது. சீனாவின் ஜியாமென் மாகாணத்தில் சமீப நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கடலோர நகரமான இங்கு, 50 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பரிசோதனை பட்டியலில் கடல்வாழ் உயிரினங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், கவச உடைகளை அணிந்துள்ள மருத்துவ ஊழியர்கள், மீன்களின் வாயில் பஞ்சு குச்சியை விட்டு மாதிரிகளை எடுப்பதும், நண்டுகளின் ஓடுகளை திறந்து மாதிரிகளை சேகரிப்பதும் பதிவாகி உள்ளது.