திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கோழிக்கோட்டை சேர்ந்தவர் சிவிக் சந்திரன் (74). பிரபல எழுத்தாளரான இவர், மலையாளத்தில் ஏராளமான கவிதை புத்தகங்கள் உட்பட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.இந்நிலையில், கோழிக்கோடு கடற்கரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது சிவிக் சந்திரன் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் எழுத்தாளர் ஒருவர் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக கோழிக்கோடு போலீசார் சிவிக் சந்திரன் மீது வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சிவிக் சந்திரன் கோழிக்கோடு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி கிருஷ்ண குமார், சிவிக் சந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நீதிபதி தனது உத்தரவில்,‘புகார்தாரர் மிகவும் ஆபாசமாகவும், கவர்ச்சியாகவும் உடை அணிந்து நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.