திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ரூட்தல பிரச்னையில் கல்லூரி மாணவரை வெட்டிய சக மாணவர்கள் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் கடந்த 16ம் தேதி பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி மாணவர்கள் இடையே ‘’ரூட்தல’’ பிரச்னையில் பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது இரண்டு தரப்பினரும் ஜல்லி கற்கள் மற்றும் கத்திகளால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் பச்சையப்பன் கல்லூரியில் பிஏ 3ம் ஆண்டு படித்துவரும் திருவள்ளூர் அருகே தக்கோலம் ராஜம்பேட்டை கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார் (20) என்பவரை கத்தியால் வெட்டியதில் தலையில் படுகாயம் அடைந்தார். அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.