கோண்டியா: மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியாவில் நேற்று அதிகாலை 1.20 மணியளவில் சரக்கு ரயில் பின்புறம் பயணிகள் ரயில் மோதிய விபத்தில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. பயணிகள் ரயிலின் 2ம் வகுப்பு பெட்டிகள் 3 தடம் புரண்டதால் அதில் இருந்த பயணிகளில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.