கொழும்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம் நீட்டிக்கப்படாது என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இலங்கை பொருளாதாரத்தை மையமாக வைத்து வெடித்த மக்கள் புரட்சியை தொடர்ந்து பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவும் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்கள். கோத்தபய வெளிநாடு தப்பிச் சென்ற நிலையில், புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே இலங்கையில் கடந்த ஜூலை 18ம் தேதியில் இருந்து அவசர நிலை அமலில் இருந்து வருகிறது.