தாம்பரம்: புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முடிச்சூர் முதல் நிலை ஊராட்சியில், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சிந்துலேகா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரதிராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், முடிச்சூர் ஊராட்சியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். ஸ்ரீ பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திரிசூலம் ஊராட்சி பகுதியில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.