சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 6வது செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் தலைவர் நாசர், துணை தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ், பொருளாளர் கார்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அப்போது கடந்த 2020ம் ஆண்டுக்கான தேசிய விருது பெற தேர்வு செய்யப்பட்ட கலைஞர்கள் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, திரைக்கதை ஆசிரியர் சுதா கொங்கரா, நடிகைகள் அபர்ணா பால
முரளி, லட்சுமிப்பிரியா சந்திர மவுலி, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், எடிட்டர் கர் பிரசாத், இயக்குனர்கள் வசந்த், மடோன் அஸ்வின், ஆர்.வி.ரமணி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.